×

என்.எல்.சி.அதிகாரிகள் தேர்வில் தமிழர்கள் புறக்கணிப்பு: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை

சென்னை: என்.எல்.சி.அதிகாரிகள் தேர்வில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டதாக பா.ம.க.இளைஞரணி தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார். சமூக அநீதியை கலையாவிட்டால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் எனவும் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கைவிடுத்துள்ளார். நெய்வேலி  என்.எல்.சி. நிறுவனத்தில்  259 பட்டதாரி நிர்வாக பயிற்சியர் பணி நேர்காணலுக்கு, 1582 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். நேர்காணலுக்கு அழைக்கப்பட்ட 1582 பேரில் 1 சதவிகிதம் கூட தமிழர்கள் இல்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.


Tags : Tamils ,NLC ,Anbumani Ramadas , Tamils boycott NLC polls: Anbumani Ramadas warns
× RELATED தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம்