×

ஒடிசா மாநிலம் கோராபுட் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி : பிரதமர் மோடி

டெல்லி : ஒடிசா மாநிலம் கோராபுட் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க பிரதமர்  திரு நரேந்திர மோடி ஒப்புதல் வழங்கியுள்ளார்.படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கவும் அவர் அனுமதி அளித்துள்ளார்.

“ஒடிசா மாநிலம் கோரபுட்டில் நிகழ்ந்த துரதிருஷ்டவசமான சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வீதம் வழங்கப்படும்” என  பிரதமர் அலுவலக ட்விட்டர் பதிவு கூறுகிறது.

முன்னதாக ஒடிசா கோராபுட் பகுதியில் நடந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து இருந்தார். பிரதமர் விடுத்துள்ள சுட்டுரை செய்தியில், ‘‘ஒடிசா கோராபுட் பகுதியில் நடந்த விபத்தில், பலியானவர்களின் குடும்பத்துக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என நம்புகிறேன்’’  என குறிப்பிட்டுள்ளார்.

ஒடிசா மாநிலம் கோராபுட் பகுதியில் நேற்று முன்தினம் நடந்த வேன் விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் காயம் அடைந்தனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.


Tags : Odisha ,families ,road accident victims ,Koraput , ஒடிசா ,கோராபுட், சாலை
× RELATED என் அம்மா உயிருடன் இருந்தவரை என்...