டெல்லி: டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். தலைநகர் டெல்லி உள்பட வடமாநிலங்களில் காலை வேளையில் கடுமையான பனி மூட்டம் நிலவுகிறது. சில அடி தூரங்களே கண்ணுக்கு புலப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். பனிமூட்டம் காரணமாக 4 ரயில்களும் தாமதமாக வருவதாக வடக்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.