×

முன்னாள் தலைமை வழக்கறிஞர்: அழகிரிசாமி மறைவு; மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் அறிக்கை: முன்னாள் தலைமை நீதிபதி வீராசாமியின் மருமகனும், தமிழக அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞருமான அழகிரிசாமி திடீரென மறைந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனைக்கு உள்ளானேன். அவரது மறைவிற்கு திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அழகிரிசாமி கலைஞருக்கு மிகவும் நெருக்கமானவர். இவரது மாமனார் வீராசாமி, நெருக்கடி நிலை அமலில் இருந்த நேரத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக- ஜனநாயகத்தின் பக்கம் உறுதியாக நின்றவர்.

திமுக ஆட்சியில் அரசு தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட அழகிரிசாமி, திமுக அரசுக்கு முக்கிய வழக்குகளில் சட்ட நுணுக்கங்கள் நிறைந்த ஆலோசனைகளை அளித்தவர்.  வழக்குகளில் ஆழமான ஆணித்தரமான சட்ட கருத்துகளை மேற்கோள்காட்டி வாதிடும் திறமை படைத்த அவரின் மறைவு நீதித்துறைக்கு மிகப்பெரிய இழப்பு. அழகிரிசாமியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் சக வழக்கறிஞர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Attorney General ,demise ,Alagirisamy ,MK Stalin , Advocate, deceased, MK Stalin, mourning
× RELATED வடகிழக்கு மாநில மக்களை கைவிட்டுவிட்ட...