சென்னை: 1997ம் ஆண்டு காஞ்சிபுரம் போலீஸ் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்ற பெண் காவலர்கள், 24 ஆண்டுகளுக்கு பிறகு மாமல்லபுரத்தில் சந்தித்தனர். அவர்களின் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். காஞ்சிபுரம் போலீஸ் பயிற்சி பள்ளியில் 1997ம் ஆண்டு பயிற்சி பெற்ற 120 பெண் காவலர்கள். சுமார் 24 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மாமல்லபுரத்தில் ஒன்று கூடி சந்தித்து, தங்கள் பயிற்சி கால மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். காஞ்சிபுரத்தில் உள்ள போலீஸ் பயிற்சியில் 1997ம் ஆண்டில் பயிற்சி பெற்ற பெண் காவலர்கள் தற்போது செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றுகின்றனர். அவர்கள் 120 பேர், மாமல்லபுரத்தில் நேற்று ஒன்று கூடி புராதன சின்னங்களை கண்டு ரசித்தனர். தங்கள் பழைய மலரும் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டனர். ஒருவருக்கு ஒருவர் நலம் விசாரித்து அனைவரும் ஒன்றாக இணைந்து குழுப் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.