×

சசிகலா காரில் அதிமுக கொடி அமைச்சர் மாபா.பாண்டியராஜன் பதில் கூற மறுப்பு

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசின் இலவச சைக்கிள்களை அமைச்சர் பாண்டியராஜன் வழங்கினார். அப்போது அவர், சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதே இலக்கு என கூறினார்.
திருக்கழுக்குன்றம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லூயிஸ் தலைமை தாங்கினார். செங்கை கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர்  எஸ்.ஆறுமுகம், திருக்கழுக்குன்றம் நகர செயலாளர் எம்.தினேஷ் குமார் ஆகியோர்  முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி வரவேற்றார்.சிறப்பு அழைப்பாராக தமிழக  தொல்லியல் துறை  அமைச்சர் மாபா பாண்டியராஜன் திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்தூர் ஆகிய ஒன்றியங்களில் அடங்கிய அரசுப்பள்ளிகளை சேர்ந்த 5704 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை வழங்கினார்.

முன்னாள் எம்பி மரகதம் குமரவேல், முன்னாள் எம்எல்ஏ தனபால், மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் ஆனூர் பக்தவச்சலம், மாவட்ட துணை செயலாளர் யஷ்வந்த் ராவ், ஒன்றிய செயலாளர்கள் மாமல்லபுரம் ராகவன், செல்வம் உட்பட பலர்  கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மாபா பாண்டியராஜன், சசிகலா தனது காரில் அதிமுக கொடியை கட்டி வந்தது, அதற்கு அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்தது குறித்து ஏதும் கருத்து கூற விரும்பவில்லை. வரும்  சட்டமன்ற  தேர்தலில் வெற்றி பெறுவது மட்டுமே இலக்காக கொண்டு பயணிக்கிறோம் என்றார்.



Tags : Mappa Pandiyarajan ,AIADMK ,Sasikala , AIADMK flag minister Mappa Pandiyarajan refuses to respond in Sasikala car
× RELATED சசிகலா காலில் விழுந்துதான் அனைவரும்...