டெல்லி: பிரதமர் மோடியுடன் அதிமுக மாநிலங்களவை எம்.பி தம்பிதுரை சந்தித்து வருகிறார். சசிகலா விடுதலையான நிலையில் பிரதமரை அதிமுக எம்.பி. தம்பிதுரை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் தொகுதி சாலை திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியதற்காக பிரதமரை சந்தித்து தம்பிதுரை நன்றி கூறியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.