சென்னை: சரக்கு வாகனம் ஏற்றி கொல்லப்பட்ட எஸ்.ஐ.பாலு குடும்பத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.50 லட்சம் நிதி அறிவித்தார். பணியின் போது உயிரிழந்த உதவி ஆய்வாளர் பாலு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் அறிவித்தார். மேலும் காயம் அடைந்த காவலர் பொன் சுப்பையாவுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்தார்.