சென்னை: அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு எந்த உரிமையும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: சசிகலா அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. கட்சியில் இல்லாத ஒருவர் அதிமுக கொடியை பயன்படுத்த எந்த உரிமையும் இல்லை. கடந்த 2017ம் ஆண்டே சசிகலா உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். எனவே, அவர் அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது. எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களின் படங்களையும் பயன்படுத்த அவருக்கு உரிமை இல்லை. சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்கியது ஒட்டுமொத்த அதிமுகவினரின் முடிவாகும். அரசியல் சார்பாக சசிகலாவுக்கு ஆதரவாக யார் கருத்து கூறினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். உண்மை தொண்டர்கள் யாரும் சசிகலா பின்னால் செல்ல மாட்டார்கள். சசிகலா எண்ணம் நிறைவேறாது. இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் அவர் கூறினார்.