×

தடுப்பூசி போட்டுக்கொண்ட 5 டாக்டர்களுக்கு கொரோனா

பெங்களூரு: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 5 மருத்துவர்களுக்கு கொரோனா பரிசோதனையில் பாசிடிவ் வந்ததால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்த சம்பவம் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரில் நடந்துள்ளது. கர்நாடகாவில் கடந்த மாதம் 16ம் தேதியிலிருந்து சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் 5 மருத்துவர்கள் உள்பட ஏழு பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது. அதன் பிறகு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் 5 மருத்துவர்களுக்கும் கொரோனா பாசிடிவ் வந்தது. இதனை மாவட்ட சுகாதார அதிகாரி எம்.சி.ரவி உறுதி செய்தார். இது குறித்து அவர் கூறும் போது. ``கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 5 பேரில் நான்கு பேர் வீட்டு தனிமையிலும் ஒருவருக்கு மாவட்ட மருத்துவமனை கொரோனா வார்டிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொற்று பாதித்த 5 பேரின் உடல் நலம் சீராக உள்ளது. தடுப்பூசி போடப்பட்ட பின்னர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சிறிது காலம் எடுக்கும் என்பதால் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பீதி அடைய வேண்டாம்’’ என்று தெரிவித்துள்ளார்.

Tags : Corona ,doctors , Corona for 5 doctors who were vaccinated
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...