சின்னசேலம்: சின்னசேலம் அருகே கார் மோதிக் கொண்ட விபத்தில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 3 பேர் படுகாயம் அடைந்தனர். சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அ.வாசுதேவனூரில் சாலையை கடப்பதற்காக தடுப்பு சுவர் அருகில் நின்று கொண்டிருந்தபோது சென்னையில் இருந்து சேலம் நோக்கி வந்த கார் வரதனின் மொபட் மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியது. விபத்தில் படுகாயம் அடைந்த வரதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.