சென்னை: அதிமுகவின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டும்தான், மற்றவர்கள் சுயநலத்திற்காக கூறுகின்றனர். அதிமுகவில் இல்லாத சசிகலா, கட்சிக் கொடியை பயன்படுத்தியது கண்டனத்திற்குரியது என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். மேலும், பல்வேறு கோணங்களில் அதிமுகவை கைப்பற்ற தினகரன் முயற்சித்து வருகிறார். அதிமுகவுக்கு எதிராக செய்த தவறுகளை ஒப்புக்கொண்டு தினகரன் மன்னிப்பு கடிதம் தர வேண்டும். அதனையடுத்து, இதுபற்றி தலைமை பரிசீலனை செய்யும். அதிமுக - அமமுக அணைக்கப்படுமா என்ற கேள்விக்கு கே.பி.முனுசாமி பதிலளித்துள்ளார்.