சென்னை: மின்வாரியத்திற்கு சொந்தமான நிலம் மற்றும் கட்டிட விபரங்களை சேகரித்தல் தொடர்பாகச கடந்த 7ம் தேதி மீண்டும் ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் வாரியத்திற்கு சொந்தமான நிலத்தின் விபரங்களை வழங்குமாறு ேகட்கப்பட்டுள்ளது. மேலும் ஆவண எண், பட்டா, சிட்டா, அடங்கல், பிற ஆவணம் போன்ற நிலப் பதிவின் கிடைக்கும்/ கிடைக்காத நிலையை கட்டாயமாக வழங்க வேண்டும். மின்வாரியத்தின் பெயரில் நிலம் மாற்றப்பட்டதா என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும். இந்த விபரங்களை அவசரமாக அனுப்பி வைக்க வேண்டும் என மின்வாரியம் சுற்றறிக்கையின் வாயிலாக உத்தரவிட்டிருந்தது. அதன்படி சம்மந்தப்பட்ட விபரங்களை சேகரித்து அனுப்பி வைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.