சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு மருத்துவ பணி மற்றும் மருத்துவ சார்நிலை பணிகளுக்கு மருத்துவ ஆய்வாளர் 46 இடங்கள், இளநிலை பகுப்பாய்வாளர் 13 பணியிடங்களை நிரப்புவதற்கான ((2017-20ம் ஆண்டுக்கானது) எழுத்து தேர்வு கடந்த 2019 ஜூன் 23ம் தேதி நடந்தது. இந்த தேர்வில் 4308 பேர் கலந்து கொண்டனர். தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் நேர்காணல் தேர்வுக்கு தற்காலிகமாக 128 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கான நேர்காணல் தேர்வு வருகிற 10ம் ேததி நடைபெறும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.