×

நாகர்கோவிலில் பரபரப்பு: சாப்ட்வேர் நிறுவன கழிவறையில் ரகசிய கேமரா: உரிமையாளர் கைது

நாகர்கோவில் :நாகர்கோவில் பள்ளிவிளையை சேர்ந்தவர் சஞ்சு (29). கோட்டார் செட்டிகுளத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன் சாப்ட்வேர் நிறுவனம் தொடங்கினார். இதில் ஏராளமான இளம்பெண்கள் பணிக்கு சேர்ந்தனர். நேற்று முன்தினம் மாலை இந்த நிறுவனத்தில் பணியாற்றும் இளம்பெண் கழிவறைக்கு சென்றார். அப்போது உட்புறமாக ரகசிய கேமரா பொருத்தப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தார். இது குறித்து சக பெண் ஊழியர்களுக்கும், கோட்டார் காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில் சாப்ட்வேர் நிறுவன உரிமையாளர் சஞ்சு ரகசிய கேமரா மூலம் இளம்பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்ப திட்டமிட்டது தெரியவந்தது.

இதையடுத்து சஞ்சுவை போலீசார் கைது செய்தனர். அவரது செல்போன், லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. லேப்டாப்பில் மேலும் பல ஆபாச படங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. கழிவறையில் பொருத்தப்பட்டு இருந்த கேமராவுடன் சஞ்சுவின் செல்போன் இணைக்கப்பட்டு செல்போனில் ஆபாச காட்சிகளை அவர் பார்த்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்த காசி பல இளம்பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த வழக்கு முடியாத நிலையில், ரகசிய கேமரா பொருத்தி இளம்பெண்களை ஆபாசமாக படம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags : Nagercoil ,Owner , Nagercoil riots: Hidden camera in software company toilet: Owner arrested
× RELATED ஆரல்வாய்மொழியில் இருந்து...