×

மானாமதுரை அருகே ஊரணியில் குளித்தபோது நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு

சிவகங்கை: மானாமதுரை அருகே ஊரணியில் குளித்தபோது நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அடுத்துள்ள மூங்கில் ஊரணி கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவரது மகன் பிரஜின்(10). அதே பகுதியை சேர்ந்த பாரதிராஜா என்பவரது மகன் ஜஸ்வந்த்(9). இருவரும் அரசுப்பள்ளியில் படித்து வந்தனர்.

கொரோனா விடுமுறை காரணமாக வீட்டில் இருந்து வந்த சிறுவர்கள் இருவரும், இன்று கீழகொம்புக்காரன் ஏந்தல் கிராமத்தில் உள்ள ஊரணிக்கு குளிக்க சென்றனர். அப்போது, எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்ற இருவரும் நீரில் மூழ்கி மாயமாகினர். இதனை கண்டு அங்கிருந்த இளைஞர்கள் நீரில் இறங்கி தேடியபோது, சிறுவர்கள் இருவரும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.

Tags : boys ,Manamadurai ,ditch , Two boys drowned while bathing in a ditch near Manamadurai
× RELATED காட்டுமன்னார்கோயில் அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு