×

செய்யூரில் திமுக பொதுக்கூட்டம் 120 நாளில் அதிமுக ஆட்சி ஆயுள் முடியும் : ஆர்.எஸ்.பாரதி எம்பி பேச்சு

செய்யூர்:காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் திமுக சார்பில், அதிமுக ஆட்சியை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் செய்யூர் திரவுபதி அம்மன் திடலில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை வகித்தார். லத்தூர் ஒன்றிய அமைப்பாளர்கள் கேஎஸ். ராமச்சந்திரன், எம்எஸ்.பாபு வரவேற்றனர். மாவட்ட அவைத்தலைவர் சேகர், மாவட்ட துணை செயலாளர்கள் வெளிக்காடு ஏழுமலை, தசரதன் முன்னிலை வகித்தனர்இந்த கூட்டத்தில் அமைப்புச் செயலாளர் ஆர்எஸ்.பாரதி எம்பி, கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இதில் ஆர்எஸ்.பாரதி பேசியதாவது;
தமிழகத்தில் இன்னும் 120 நாட்கள் மட்டுமே அதிமுக ஆட்சி நடைபெறும். கலைஞர் ஐந்து முறை முதலமைச்சராக இருந்திருக்கிறார். அவர் மக்களுக்கான ஆட்சியை நடத்தினார்.டெல்லிக்கு சென்ற எடப்பாடி, ஜெயலலிதா நினைவிடம் திறக்க மோடி, அமித்ஷா ஆகியோரை அழைத்தார். ஏன் அவர்கள் விழாவுக்கு வரவில்லை. தண்டனை பெற்றவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் இவர்களுக்கு  சட்டச் சிக்கல் வரும் என்பது தெரியும்.இவ்வாறு பேசினார்.

இந்த கூட்டத்தில் க.செல்வம் எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் ஆர்டி.அரசு, எழிலரசன், நிர்வாகிகள் ராமலிங்கம், ஆறுமுகம்,  கே.குமார், பி.எம்.குமார், ஸ்ரீதரன், கண்ணன், ஞானசேகரன், சேகர் டி.குமார், குமணன், சத்யசாய், ஏழுமலை, தம்பு, சரவணன், சிற்றரசு, பூபாலன், அப்துல்மாலிக், செய்யூர் ஆசிரியர்  கே.டி.ஆர்.தியாகராஜன், பால்ராஜ், அருண் மொழிவர்மன், டைகர் குணா, மோகன்தாஸ், கினார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.



Tags : meeting ,DMK ,speech ,Bharathi MP , ஆ.ர்எஸ்.பாரதி
× RELATED திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்