×

பழனி முருகன் கோயிலில் மொட்டை அடித்து நேர்த்திக் கடன் செலுத்திய கிரிக்கெட் வீரர் யார்க்கர் நடராஜன்

திண்டுக்கல் :பழனி முருகன் கோயிலில் இந்திய கிரிக்கெட் வீரர் யார்க்கர் நடராஜன் மொட்டை அடித்து வழிபாடு செய்தார்.ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்திய கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று இந்தியாவிற்கு ஆதரவாக அபாரமாக விளையாடிய கிரிக்கெட் வீரர் நடராஜன் இன்று பழனி கோவிலுக்கு வருகை தந்தார்.சேலத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீர்ர நடராஜன் இன்று காலை பழனி அடிவாரத்தில் உள்ள முடிக்கொட்டகையில் மொட்டை அடித்து, ரோப்கார் வழியாக மலைக்கோவிலுக்கு மேலே சென்று சாமி தரிசனம் செய்தார்.

இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் பழனி கோவிலுக்கு வருகை தந்தது குறித்து தகவலறிந்து ஏராளமான பொதுமக்கள் அவரை காண குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.பொதுமக்கள் நடராஜனுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள முட்டி மோதியதால் ரோப்கார் நிலையத்தில் இருந்து வெளியே வரமுடியாமல் திணறிய நடராஜனை அவரது நண்பர்கள் பாதுகாப்பாக காரில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.இந்திய கிரிக்கெட் இடம்பெற்று டெஸ்ட், ஒருநாள் , டி20 போட்டிகளில் அறிமுகமானது, மகள் பிறந்தது என சமீபகாலமாக ஏரளாமான நல்ல தருணங்களை பெற்ற நடராஜன், பழனி முருகன் கோவிலில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளார்.

Tags : Yorker Natarajan ,Palani Murugan Temple , Palani Murugan Temple, Mottai
× RELATED கோயிலில் உழவார பணி