பெங்களூரு: சசிகலா நாளை காலை 10 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று பெங்களூரு மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. சிறையில் இருந்து விடுதலையான சசிகலா, பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து, கொரோனா தொற்றில் இருந்து மீண்டு சசிகலா உடல்நிலை சீரானதை அடுத்து நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.