×

அதிமுகவில் சசிகலாவை சேர்க்கவோ, அமமுகவை இணைக்கவோ வாய்ப்பில்லை : அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்!!

சென்னை : சிறையில் இருந்து விடுதலை ஆகி உள்ள சசிகலா அரசியலில் ஈடுபட கூடாது என்றே அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் மகன் ஜெய பிரதீப் வலியுறுத்தி உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது 100க்கு 100 சதவீதம் சாத்தியம் இல்லை என்று அவர் மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும் சசிகலா உடல்நலம் பெற வேண்டும் என்று ஓ பன்னீர் செல்வம் மகன் ஜெயபிரதீப் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி மனிதாபிமான அடிப்படையில் ஆனது என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் ஜெயபிரதீபின் வாழ்த்துச் செய்தியில் சசிகலா அரசியலில் ஈடுபடக் கூடாது என்றே வலியுறுத்தப்பட்டுள்ளதால் அதில் கட்சியில் சலசலப்புக்கு இடம் இல்லை என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  அதிமுக கூட்டணி கட்சிகளுக்குள் எந்த பிரச்னையும் இல்லை என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார். அதிமுக கூட்டணியில் தேமுதிக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகளின் கோரிக்கைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஒவ்வொரு கட்சிக்கும் கருத்துக்களை கூற உரிமை உண்டு என்று தெரிவித்துள்ளார். எனவே அந்த வகையில், அந்த கட்சிகள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் தேவைகளை கூறி வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Tags : Jayakumar ,AIADMK ,Sasikala , AIADMK, Sasikala, Minister Jayakumar, Planned
× RELATED எண்ணி முடிக்கவே 2...