நாட்றம்பள்ளி: திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த பங்களாமேடு அருகே உள்ள காட்டுப்பகுதியில் கை, கால்களை கட்டி முகம் சிதைத்து வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக நாட்றம்பள்ளி போலீசாருக்கு அப்பகுதி மக்கள் நேற்று மாலை தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் எஸ்பி விஜயகுமார், நாட்றம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.அப்போது வாலிபர் ஒருவரின் கை, கால்களை கட்டிய கும்பல் தலை மீது லாரி ஏற்றி கொன்றதால், முகம் சிதைந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், கிருஷ்ணகிரி மாவட்டம் சந்தூர் பகுதியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் சிவக்குமார்(37) என்பது தெரியவந்தது. நேற்று காலை பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு, வீட்டில் இருந்து புறப்பட்டவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது. இதுகுறித்து நாட்றம்பள்ளி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.