×

காதலியை கத்தியால் குத்திவிட்டு தப்பிய காதலன் தூக்கிட்டு தற்கொலை

புழல்: புழல் விநாயகபுரம் மாதவன் நகர் மெயின் ரோட்டை சேர்ந்த பிரேமலதா (22), அம்பத்தூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரும், அதே பகுதியை சேர்ந்த சுதாகரும் (26), கடந்த 4 ஆண்டாக காதலித்து வந்தனர். இந்நிலையில், சுதாகரின் நடவடிக்கை பிடிக்காததால் கடந்த சில மாதங்களாக பிரேமலதா அவரிடம் பேசுவதை தவிர்த்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சுதாகர் நேற்று முன்தினம் அதிகாலை பிரேமலதா வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டு, அவரை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பினார். படுகாயமடைந்த பிரேமலதாவுக்கு  ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. புகாரின் பேரில், புழல் போலீசார் சுதாகரை தேடி வந்தனர். இந்நிலையில், மாதவரம் விஎஸ் மணி நகரில் உள்ள மின் கம்பத்தில் சுதாகர் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.  சடலத்தை கைப்பற்றி, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : death , Girlfriend, stabbed, boyfriend, hanged and committed suicide
× RELATED பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில்...