×

செல்போனில் கேம் விளையாடியதை கண்டித்ததால் சிறுவன் தற்கொலை

பல்லாவரம்: காஞ்சிபுரத்தை சேர்ந்த இசைமுத்து மகன் மாதவன் (15), அதே பகுதி அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தான். பள்ளி விடுமுறை என்பதால் பெருங்களத்தூரில் உள்ள அக்கா வீட்டில் தங்கியிருந்த மாதவன், எந்நேரமும் செல்போனில் ஆன்லைன் கேம் விளையாடியுள்ளான். இதை கண்டித்த அவனது அக்கா, நேற்று முன்தினம் செல்போனை பிடுங்கி மறைத்து வைத்துள்ளார்.  இதனால் மனமுடைந்த மாதவன் நேற்று முன்தினம் இரவு படுக்கையறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்.


Tags : suicide ,game , On the cell phone, the boy, suicidal because of reprimand
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை