டெல்லி: டெல்லி கலவரம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்க உச்சநீதிமன்றத்துக்கு பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 60 நாட்களுக்கு மேலாக அமைதியாகவும், அறவழியில் டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். குடியரசு தினத்தன்று நடத்திய பேரணியில் வன்முறையில் ஈடுபட்டதாக மத்திய அரசு குற்றம் சாட்டுவது நம்ப முடியாததாகும் என அவர் குறிப்பிட்டார்.