×

கொரோனாவில் இருந்து மீண்டார் சோட்டா ராஜன்

புதுடெல்லி: பிரபல நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய நண்பரான சோட்டா ராஜன் இந்தியாவில் பல சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவர். 2000ம் ஆண்டில் தாவூத்திடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சோட்டா ராஜன் விலகினார். இதனை தொடர்ந்து மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் சோட்டா ராஜனை இந்தேனேசியாவில் 2015ல் கைது செய்தனர். டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது. எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இறந்து விட்டதாக தவறான செய்திகள் பரவின.  இந்நிலையில், தொற்றிலிருந்து முழு குணமடைந்த அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மீண்டும் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்….

The post கொரோனாவில் இருந்து மீண்டார் சோட்டா ராஜன் appeared first on Dinakaran.

Tags : Sota Rajan ,Corona ,New Delhi ,Dada Dawood Ibrahim ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...