×

குடும்ப சூழல் காரணமாக 63 வயதில் திருமணம்.. சில மணி நேரங்களிலேயே மனைவி இறந்த சோகம்

அகமதாபாத் : நபர் ஒருவரின் 63 வயதில் திருமணம் முடிந்த சிறிது நேரத்தில் மணப்பெண் உயிரிழந்துள்ளது மொத்த கிராமத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குஜராத் மாநிலத்தின் பீப்பல்சட் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் கல்யாண்பாய். 63 வயதான இவருக்கு, பல ஆண்டுகளாக பெண் தேடியும் திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை. அது மட்டுமில்லாமல், தனது மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரர், விதவை சகோதரி ஆகியோரை கவனித்துக் கொள்ளும் பொறுப்பும் கல்யாணிடம் இருந்தது.

 தனது  குடும்பத்தை கவனித்து கொள்ளும் கூடுதல் பொறுப்பு கல்யாணிடம் இருந்ததால் அவரது திருமணம் தள்ளிக் கொண்டே போனது. தனக்கு 63 வயதானாலும் திருமணம் செய்து கொள்வதில் மட்டும் கல்யாண் பாய் உறுதியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், அவரை மணந்து கொள்ள லைலாபென் ரபரி என்ற 40 வயது பெண் சம்மதம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, கல்யாண் பாய் - லைலாபென் ரபரி ஆகியோரின் திருமணம், கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில், நேற்று முன்தினம் நடைபெற்றது. அதன்பின்னர், புதுமணத்தம்பதி வீட்டிற்கு மணமக்கள் சென்ற போது, திடீரென மணப்பெண் லைலாபென் ரபரி சுருண்டு தரையில் விழுந்துள்ளார். உடனடியாக அங்கிருந்த உறவினர்கள் லைலாபென்னை மீட்டு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையறிந்த கல்யாண், அதிர்ச்சியில் துடிதுடித்து போனார். திருமணம் செய்து கொண்டு வருவதற்குள் தனது மனைவி உயிரிழந்ததை அறிந்து கதறி அழுத கல்யாண், மனைவியின் உடலுக்கு இறுதிச்சடங்கு நடத்தி உடலைத் தகனம் செய்தார்.  63 வயதில் கல்யாண் அவர்களின் திருமணத்தை பார்த்து மொத்த கிராமமும் மகிழ்ச்சியில் இருந்துள்ளனர். ஆனால் திருமணம் நடந்துமுடிந்தது புதுப்பெண் உயிரிழந்ததால் மொத்த கிராமமும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

Tags : Family environment, marriage, wife
× RELATED மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள...