டெல்லி: யுபிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகளை ஏன் வழங்கக்கூடாது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கூடுதல் வாய்ப்புகள் வழங்குவது தொடர்பாக மத்திய அரசு, யுபிஎஸ்சி நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. முந்தைய காலங்களில் சலுகைகள் வழங்கப்பட்ட போது தற்போது ஏன் வழங்கக்கூடாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.