×

பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் இன்று அல்லது நாளை முடிவெடுக்க வாய்ப்பு!

டெல்லி: பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து இன்று அல்லது நாளை ஆளுநர் முடிவெடுக்க வாய்ப்புள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள 7 பேரை விடுவிக்க 2018ம் ஆண்டு தமிழக அரசு தீர்மானம் செய்தது. தமிழக அரசின் தீர்மானம் மீது ஆளுநர் முடிவெடுக்காதது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 7 பேர் விடுதலை குறித்து ஒரு வாரத்தில் முடிவெடுத்து தெரிவிக்க ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.


Tags : Governor ,release ,persons ,Nalini ,Perarivalan , Perarivalan, Nalini, 7 released, ruled, decided
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...