சென்னை: ஜெயலலிதா நினைவு இல்ல சாவியை கோர்ட்டில் ஒப்படைக்க தேவையில்லை; அரசே வைத்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவாளரிடம் சாவியை ஒப்படைக்க உத்தரவிட்ட தனிநீதிபதி ஆணைக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஜெயலலிதா நினைவு இல்ல மேல்முறையீடு வழக்கில் தீபா, தீபக்கிற்கு தலைமை நீதிபதி அமர்வு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழக அரசின் மேல்முறையீடு வழக்கு விசாரணையை பி.3ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.