டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். குடியரசு தலைவர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் சற்று நேரத்தில் தொடங்கவுள்ள நிலையில் பிரதமர் மோடி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவுக்கு இந்த 10 ஆண்டு மிக முக்கியமானது. விடுதலை போராட்ட வீரர்களின் கனவை நனவாக்க நாம் பாடுபட்டு கொண்டிருக்கிறோம் என குறிப்பிட்டார்.