திருப்பத்தூர்: திருப்பத்தூர் காவலர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பெண் காவலரின் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். குருசிளபட்டு காவல் நிலையத்தில் எஸ்.ஐ.யாக இருக்கும் சாந்தி (37) அவரது கணவர் சாம்ராஜ் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சாம்ராஜ் வீட்டின் ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.