×

ஒரு வாரத்தில் புதிய கட்சி ரஜினி ரசிகர்கள் அதிகளவில் சேர வேண்டும்

* ரஜினிக்கு     டூப்பாக இருக்க மாட்டேன்
* அர்ஜூன மூர்த்தி பேட்டி

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவித்து, அந்த கட்சிக்கு அர்ஜூன மூர்த்தி என்பவரை தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமித்திருப்பதாக அறிவித்தார். இவர், பாஜகவின் அறிவுசார் பிரிவின் மாநில தலைவராகப் பதவி வகித்து வந்து, பின்னர் அதை ராஜினாமா செய்தவர்.இந் நிலையில் தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்தார். இதுகுறித்து அர்ஜூன மூர்த்தி அளித்த பேட்டி: தமிழ் மக்களுக்கும், உலகத்திற்கும் என்னை காண்பித்த ரஜினிகாந்துக்கு நன்றி. என்ன சாதிக்க முடியும் என்ற கேள்வி என் குடும்பத்திலேயே உள்ளது. 40-50 நாட்களுக்குள்ளாக சோதனை ஓட்டமாக நடந்தேறியுள்ளது.

யாராவது நல்லது செய்வார்கள் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. ஜல்லிக்கட்டிற்காக போராடிய இளைஞர்களின் சக்தியை குறைத்து மதிப்பிட முடியாது. மாற்றத்திற்கான விதையை விதைக்க முடியும். ஜல்லிக்கட்டு போன்ற எழுச்சியை மீண்டும் கொண்டு வர முடியும். அரசியல் கட்சி நிறுவும் ஆர்வமும், ஆசையும் எனக்கு உள்ளது. சிறப்பான, நேர்மையான, அதீதமான தொலை நோக்கு உள்ள கட்சியை நிறுவ முடியும் என்ற நம்பிக்கை எனக்கு வந்துள்ளது. ரஜினியை துன்பப்படுத்துவது நியாயமற்ற செயல். கட்சி தொடங்குவது வெற்றிகரமாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன். தொடங்கப்படும் கட்சி பாஜகவிலிருந்தும் மாற்றாக அமையும்.

பாஜகவிற்கே புது சிந்தனை கொடுத்த அர்ஜூன மூர்த்தியால் மக்களுக்கு கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. இதுவரை எந்த கட்சியமைப்பும் இல்லாத அணுகுமுறையாக இருக்கும். தொடங்கப்பட உள்ள கட்சி வரும் தேர்தலில் போட்டியிடும். ஒருவாரத்தில் அறிவிக்கப்படும். பெரியார், காந்தி சித்தாந்தங்கள் என்று இல்லை. புதிய சித்தாந்தமாக இருக்கும். ரஜினி ரசிகர்களுக்கு வேண்டுகோள், ரஜினி படத்தை

பயன்படுத்தப்போவதில்லை. என் மேல் நம்பிக்கை இருக்கும்பட்சத்தில் அவர்களை வருக வருக என அழைக்கிறேன். பாஜவில் ஒரு பிரிவின் தலைவராகவே இருந்தேன். கட்டுப்பாடுகள் உண்டு. மதமற்று, சாதியற்று இருக்கும். எனக்கு எனது சிந்தனை தான் தலைவர். கட்சி தொடங்கப்படும்போது நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ரஜினிக்கு டூப்பாக இருக்க மாட்டேன்.

Tags : party ,fans ,Rajini , New party in a week Rajini fans Want to join more
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்...