×

பிப்ரவரி 3ம் தேதி அண்ணா சமாதியில் இபிஎஸ், ஓபிஎஸ் அஞ்சலி

சென்னை:  அதிமுக தலைமை கழகம் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அண்ணாவின் 52வது நினைவு நாளான பிப்ரவரி 3ம் தேதி (புதன்) காலை 10 மணிக்கு சென்னைமெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளனர். அதைத்தொடர்ந்து அதிமுக தலைமை கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும் அஞ்சலி செலுத்துவார்கள். இந்த நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், அதிமுகவின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் பங்குபெற வேண்டும். தமிழகம் மற்றும் அதிமுக அமைப்புகள் செயல்படும் இடங்களில் 3ம் தேதி அண்ணா சிலைக்கு அல்லது படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : OBS ,Anna Samadhi , Anna Samadhi, EPS, OBS Tribute
× RELATED பாஜவை தோற்க வைத்து விட்டு ஓபிஎஸ், டிடிவியுடன் அண்ணாமலை தனிக்கட்சி