×

கூச்சல் குழப்பத்திற்கிடையே சட்டங்களை நிறைவேற்ற அனுமதிக்காதது ஏன்?.. பிரதமர் நேரில் வந்து கேள்வி கேட்டதை விவரித்துள்ள ஹமீத் அன்சாரி

டெல்லி: மாநிலங்களவை தலைவராக செயல்பட்ட போது கூச்சல் குழப்பத்திற்கிடையில் மசோதாக்களை நிறைவேற்ற ஏன் அனுமதிக்கவில்லை என பிரதமர் நரேந்திர மோடி தம்மை கேள்வி கேட்டதாக முன்னாள் குடியரசு துணை தலைவர் ஹமீத் அன்சாரி தெரிவித்துள்ளார். BY MANY A HAPPY ACCIDENT என்ற புத்தகத்தை ஹமீத் அன்சாரி எழுதியுள்ளார். அதில் ஒரு நாள் எந்தஒரு அறிவிப்பும் இல்லாமல் பிரதமர் தனது அலுவலகத்துக்கு வந்ததாக ஹமீத் அன்சாரி குறிப்பிட்டுள்ளார்.

அப்போது அவையில் கூச்சல் குழப்பம் நிலவும் போது சட்டங்களை நிறைவேற்ற ஏன் அனுமதிக்கவில்லை என பிரதமர் தம்மை கேட்டதாக ஹமீத் அன்சாரி தனது புத்தகத்தில் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்த போது ஏற்பட்ட சவால் நிறைந்த தருணங்கள், பாஜகவின் எதிர்ப்புகள் உள்ளிட்டவற்றை அன்சாரி அந்த புத்தகத்தில் நினைவு கூர்ந்துள்ளார்.


Tags : Hamid Ansari , Hamid Ansari describes why the Prime Minister came in person and asked questions.
× RELATED ஹமீது அன்சாரியை மோடி கேலி செய்த வீடியோ...