வேதாரண்யம் : கோடியக்காட்டில் நாய் கடித்து புள்ளிமான் இறந்தது.வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் புள்ளிமான் வெளிமான் பன்றி முயல் நரி போன்ற விலங்குகள் அதிகளவில் வசித்து வருகிறது. வேதாரண்யம் அருகே கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம் உள்ளது. இங்கு ஏராளமான் மான்கள் உள்ளன. இந்நிலையில் காட்டை விட்டு வெளியேறி 3 வயது மதிப்புள்ள ஆண் புள்ளிமான் ஒன்று கோடியக்காடு காளியம்மன் கோவில் தெருவில் உலாவியது.
அப்போது அந்த புள்ளிமானை விரட்டி சென்று நாய் கடித்தது. இதில் காயமடைந்து புள்ளிமான் இறந்தது.
இந்த தகவல் கிடைத்ததும் கோடியக்கரை வனதுறையினர் கால்நடை மருத்துவருடன் சென்று மானை மருத்துவ பரிசோதனை செய்து காட்டு பகுதிக்கு கொண்டு சென்று புதைத்தனர்.