×

பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற டிரைவர் கைது

பெங்களூரு:  குழந்தையுடன் சென்ற தாயை பலாத்காரம் செய்ய முயற்சித்த டிரைவரை போலீசார் கைது செய்தனர். ரெய்ச்சூர் மாவட்டம் லிங்கசகூரு தாலுகா சர்ஜாபுரா பகுதியை சேர்ந்தவர் திருமணமான பெண். இவர் சம்பவத்தன்று மதியம் தனது மூன்று வயது குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் தாலுகா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அப்போது மருத்துவமனையின் முன் வாகனத்தை நிறுத்தி விட்டு சிறுநீர் கழிப்பது போல் நாடகமாடிய வாகன ஓட்டுனர் பாகல்கோட்டை சேர்ந்த சங்கரப்பாமுலகுந்தா என்பவர் பெண் கையில் இருந்த குழந்தையை பறித்துக்கொண்டு கரும்பு தோட்டத்துக்குள் சென்றார்.

இதில் அதிர்ச்சியடைந்த தாய் குழந்தையை காப்பாற்ற டிரைவரை துரத்தி சென்றார். சிறிது தூரம் சென்ற டிரைவர் குழந்தையை கீழே இறக்கி விட்டு தாய் மீது பாய்ந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தார்.  இதனால் பெண் சத்தமாக கூச்சலிட்டார். இவரது அலறல் சத்தம் கேட்ட அவ்வழியாக சென்ற பொதுமக்கள் விரைந்து வந்தனர். மக்கள் வருவதை அறிந்த டிரைவர் அங்கிருந்து தப்பி செல்ல முயற்சித்தார். ஆனால் இவரை மடக்கி பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து லிங்கசகூரு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Rape of a woman The driver who tried to do so was arrested
× RELATED சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று...