×

தாம்பரத்தில் நூலகம், மீன் மார்க்கெட் சமுதாய நலக்கூடம் திறப்பு: டி.ஆர்.பாலு எம்பி பங்கேற்பு

பல்லாவரம்: தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 85 லட்சம் மதிப்பில் தாம்பரம் அடுத்த மதுரபாக்கத்தில் சமுதாய நலக்கூடம், தாம்பரம் சண்முகம் சாலையில் 85 லட்சம் மதிப்பில் புதிய நூலக கட்டிடம் மற்றும் 39 லட்சம் மதிப்பில் மீன் மார்க்கெட் ஆகியவை திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று தாம்பரத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு கலந்துகொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது, “வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் திமுகவை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் அவர்களது கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றப்படும்” என்றார். இதில், ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினர் தாமோ.அன்பரசன், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் நகராட்சி ஆணையர் சித்ரா, நகராட்சி செயற்பொறியாளர் கணேசன், மாவட்ட நூலகர் மந்திரம் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags : Tambaram Library ,Opening ,Fish Market Community Welfare Center , Tambaram Library, Fish Market Community Welfare Center Opening: DRPalu MP Participation
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு