×

சரக்கு ரயில் தடம் புரண்டது

அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் பகுதியில் வாகனங்களை இறக்கி ஏற்றும் தனியார் சரக்கு முனையம் உள்ளது. இந்நிலையில், மேல்பாக்கம் பகுதியில் இருந்து அரக்கோணம் ரயில் நிலைய யார்டிற்கு நேற்று மாலை கார்களை ஏற்றி செல்லும் காலி சரக்கு ரயில் 27 பெட்டிகளுடன் புறப்பட்டு வந்தது. அப்போது, சரக்கு ரயில் 8வது பெட்டியில் உள்ள சக்கரங்கள் திடீரென தண்டவாளத்தை விட்டு விலகி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதையடுத்து, தடம் புரண்ட சரக்கு ரயில் சக்கரத்தை ஹைட்ராலிக் ஜாக்கி மூலம் தூக்கி நிறுத்தி சரி செய்தனர். இச்சம்பவத்தால் பயணிகள் போக்குவரத்து ரயில் சேலை எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை. …

The post சரக்கு ரயில் தடம் புரண்டது appeared first on Dinakaran.

Tags : Arakkonam ,Ranippet district ,Melpakkam ,Dinakaran ,
× RELATED பணப் பட்டுவாடாவை ஆதாரத்துடன்...