மதுரை: முகநூல், யூடியூப் சமூக வலைத்தளங்களில் தணிக்கை செய்த பின் வீடியோவை வெளியிட உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் முகநூல், யூடியூப், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. முகநூல், யூடியூப்பில் பதிவேற்றப்படும் வீடியோக்களில் புகார் வரும்பட்சத்தில் மத்திய அரசு தலையிடும் என்று வாதாடப்பட்டது.