சென்னை: ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்ல விவகாரத்தை அவசரமாக வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஜெ.தீபக் தரப்பில் முறையிட்டதை அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதி அமர்வு மறுத்துவிட்டது. ஜெயலலிதா நினைவு இல்லம் நாளை திறக்கப்பட உள்ள நிலையில் தீபக்கின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.