சென்னை: கிராம சபை கூட்டங்களை நடத்தக்கூடாது என அறிவித்துள்ள தமிழக அரசு, யாருக்கு பயப்படுகிறது என கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டிவிட்டரில் கூறியிருப்பதாவது: கிராம சபைக் கூட்டங்கள் நடத்தக்கூடாது என்று அறிவித்திருக்கிறது தமிழக அரசு. கோவிட் காரணம் காட்டியிருக்கிறது. குடியரசு நாள் கொண்டாடலாம், ஜெயலலிதா விழா நடத்தலாம், கிராம சபை மட்டும் கூடாதா. உண்மையில் இந்த அரசு யாருக்கு பயப்படுகிறது என்று கேட்டுள்ளார்.