×

அவன் இவன் பட வழக்கு: அம்பை கோர்ட்டில் டைரக்டர் பாலா ஆஜர்

அம்பை: பாலா இயக்கத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திரையிடப்பட்ட ‘அவன் இவன்’ படத்தில் சிங்கம்பட்டி ஜமீன், காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில் பற்றிய சர்ச்சைக்குரிய வகையில் காட்சிகள் இடம்பெற்றதாக அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிங்கம்பட்டி ஜமீன் தீர்த்தபதிராஜா மகன் சங்கர் ஆத்மஜன் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு தொடர்பான விசாரணை அம்பை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. இதையொட்டி டைரக்டர் பாலா நேரில் ஆஜராகினார். அப்போது மாஜிஸ்திரேட் கார்த்திகேயன் நடத்திய விசாரணையின்போது படத்தில் வரும் கதாபாத்திரமும், கதையும் கற்பனை என்றும்,

இவ்வாறு வழக்குத் தொடர்வதின் மூலம் பண ஆதாயம் பெறுவதற்காக மட்டுமே புனையப்பட்ட பொய் வழக்கு என்றும் கூறியதாகத் தெரிகிறது. இதையடுத்து வழக்கு விசாரணையை பிப். 8ம்தேதிக்கு ஒத்திவைத்த மாஜிஸ்திரேட் அப்போது மீண்டும் ஆஜராகும்படி பாலாவுக்கு உத்தரவிட்டார். இவ்வழக்கில் மனுதாரர் சங்கர் ஆத்மஜன் சார்பாக வக்கீல் ரமேஷ் ஆஜரானார். இயக்குநர் பாலா சார்பில் வக்கீல்கள் முகமது உசேன், நயினார் முகமது ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.

Tags : Bala Azhar ,Ambai Court , Avan Ivan film case: Director Bala Azhar in Ambai Court
× RELATED நோய்க்கு ஏற்ற உணவு முறை 2400...