×

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியை நோக்கி தொடங்கியது விவசாயிகளின் பிரம்மாண்ட டிராக்டர் பேரணி

டெல்லி: டெல்லி சிங்கு எல்லையில் காவல்துறை தடுப்புகளை மீறி விவசாயிகளின் டிராக்டர் பேரணி தொடங்கியுள்ளது. 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற கோரி டெல்லியை நோக்கி விவசாயிகளின் டிராக்டர் பேரணி நடைபெற்று வருகிறது. டெல்லி - ஹரியானா எல்லையான சிங்குவில் இருந்து ஏராளமான விவசாயிகள் டிராக்டர்களில் பேரணியை தொடங்கினர்.

11 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் 62வது நாளான இன்று டிராக்டர் பேரணியை விவசாயிகள் முன்னெடுத்து வருகின்றனர். ஹரியானா எல்லையான சிங்குவில் இருந்து தொடங்கும் பேரணி கன்ஜாவாலா , பவானா , அவுசான்டி எல்லை , கே.எம்.பி.எக்ஸ்பிரஸ் வழியாக மீண்டும் சிங்குவை சென்றடையும். இதையடுத்து திக்ரி எல்லையில் இருந்து தொடங்கும் பேரணி நாக்லோ , நஜாப்கர் , மேற்கு எல்லைப் பகுதி எக்ஸ்பிரஸ் வே வழியாக மீண்டும் திக்ரியை சென்றடையும்.

மூன்றாவதாக டெல்லி - உத்தரப்பிரதேச எல்லையான காஜிப்பூர் எல்லையில் இருந்து தொடங்கும் பேரணி குன்ட்லி , காஜியாபாத் , பல்வால் எக்ஸ்பிரஸ் வே வழியாக சென்று மீண்டும் காஜிப்பூரை அடையும். சுமார் 100 கிலோமீட்டருக்கு நடைபெறும் இந்த பேரணி மாலை ஆறு மணிக்கு முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : tractor rally ,Delhi , A huge tractor rally of farmers started towards Delhi against the agricultural laws
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...