மைசூரு: மைசூரு மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி உள்ளது. இந்நிலையில், நஞ்சன்கூடு-டிநரசிபுரா ஜங்ஷன் இடையே உள்ள லலிதாத்ரி புரா கிராமத்திற்கு செல்லும் பாதையில் மர்மநபர்கள் வனப்பகுதிக்கு தீவைத்துள்ளனர். இதனால், சாமுண்டி மலை அடிவாரத்தில் இருந்து ரிங்ரோடு வரை நூற்றுக்கணக்கான ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையாகி உள்ளது. தற்போது கோடைக்காலம் நெருங்கிவரும் நிலையில் மரங்களின் இலைகள் காய்ந்து உதிர்ந்து வருகிறது. இதனால் தீ ஏற்படும் சம்பவங்கள் நடந்து வருகிறது. வனத்துறையினர் இது குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.