சென்னை: வேளாண் சட்டத்தை ரத்து செய்ய கோரி டெல்லியில் பேரணி நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் டிராக்டர் மற்றும் பைக் பேரணி நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த பேரணிக்கு மாநகர காவல் துறை தடை விதித்துள்ளது. இந்த தடையை மீறி டிராக்டர் மற்றும் பைக் பேரணி நடத்தினால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகர போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.