×

பிளஸ் 1 மாணவியை கடத்தி வடபழநியில் திருமணம்: வாலிபர் கைது

ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் உள்ள நிலாவூர் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள்(16) பிளஸ் 1 படித்து வருகிறார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கல்லாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார்(25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நிலாவூர் பகுதியை சேர்ந்த பிளஸ் 1 மாணவியை கடந்த 18ம் தேதி இரவு ராஜ்குமார், ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் ராஜ்குமார் மற்றும் மைனர் பெண்ணை தேடிவந்தனர்.

இந்நிலையில், சென்னை அருகே ஒரு பகுதியில் இருவரும் போலீசாரிடம் சிக்கினர். விசாரணையில், மைனர் பெண்ணை சென்னை வடபழனி கோயிலில் ராஜ்குமார் திருமணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து ராஜ்குமார் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : student ,Vadapalani ,Valipar , Plus 1 student abducted and married in Vadapalani: Valipar arrested
× RELATED இறைவன் விட்ட வழி என்று வாழ்க்கையில் இருக்க முடியுமா?