×

குமரியில் பெண் டாக்டர் உள்பட 4 இளம்பெண்கள் அடுத்தடுத்து மாயம்

நாகர்கோவில்: குமரியில் பெண் டாக்டர் உள்பட 4 இளம்பெண்கள் அடுத்தடுத்து மாயம் ஆனார்கள். சுசீந்திரம் ஆஞ்சநேயர் நகரை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி (28). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி காயத்ரி (21).  6 மாதத்தில் ஒரு மகன் உள்ளான். சம்பவத்தன்று காயத்ரி செல்போனில் பேசிக் ெகாண்டு இருந்தார். நீண்ட நேரமாக பேசியதால் ஈஸ்வரமூர்த்தி கண்டித்தார். பின்னர் ஆட்டோ ஓட்ட சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்த போது, காயத்ரி மற்றும் குழந்தையை காணவில்லை. இது குறித்து சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதே போல் பள்ளம் நைனாபுதூர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கவாசகம். இவரது மனைவி கலைவாணி (27).  கடந்த 23ம் தேதி வீட்டில் இருந்த கலைவாணி திடீரென மாயம் ஆனார். குழந்தையையும் காணவில்லை. இது குறித்து அவரது சகோதரர் அளித்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். புதுக்கடை அடுத்த இணையம் புத்தன்துறை பகுதியை சேர்ந்தவர் சங்கர நாராயணன். இவரது மகள் கனகமீனாள் (30). இவர் ஆயுர்வேத டாக்டர். தெரிசனங்கோப்பு மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று வீட்டில் டாக்டர் கனகமீனாளை திடீரென காணவில்லை.

பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவரது தந்தை புதுக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். குழித்துறை கோர்ட் ரோடு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமாரன் நாயர். இவரது மகள் திவ்யா என்ற நாயர் (32). இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் ஒரு மகன் உள்ளனர். களியக்காவிளை மேக்கோடு என்ற இடத்தில் குடும்பத்துடன் திவ்யா வசித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த திவ்யாவை காண வில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், இவரது அவரது தாயார் சுனிதகுமாரி, களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மாயமான 4 இளம்பெண்களையும் சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் தேடி வருகின்றனர்.



Tags : girls ,Kumari ,doctor , 4 young girls in a row, including a female doctor in Kumari
× RELATED சித்திரை மாத பிறப்பையொட்டி குமரி...