விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கூட்டுறவு மருத்துவமனையில் தவறான ஊசி போட்டதால் இளைஞர் உயிரிழந்துள்ளார். காய்ச்சலுக்காக சிகிச்சை பெற வந்த முகேஷ்(23) இளைஞர் தவறான ஊசி செலுத்தப்பட்டதால் உயிரிழந்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரை அடுத்து தளவாய்புரம் கூட்டுறவு சுகாதார மருத்துவமனைக்கு சீல் வைத்து சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.