×

திருச்சுழி கண்மாயில் அம்மன் சிலை மீட்பு

திருச்சுழி : விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில் பெரிய கண்மாய் உள்ளது. இங்கு நீரில் பாதி மூழ்கிய நிலையில் அம்மன் சிலையை பொதுமக்கள் நேற்று பார்த்தனர். உடனடியாக வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். திருச்சுழி வட்டாட்சியர் தன்ராஜ் தலைமையிலான வருவாய்த்துறையினர், கண்மாயில் இருந்து சிலையை மீட்டு, வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். வருவாய்த்துறையினர் கூறுகையில், `‘மீட்கப்பட்டது அம்மன் சிலை போல் உள்ளது. மாவட்ட நிர்வாகம் மூலம் விருதுநகர் அருங்காட்சியகத்தில் இச்சிலை ஒப்படைக்கப்படும்’’ என்றனர்.

Tags : Recovery ,Tiruchirappalli , Tiruchirappalli: Virudhunagar district has a large eye for Tiruchirappalli. The public saw the idol of the goddess half submerged here yesterday.
× RELATED 4 ஆண்டுகள் பழனிசாமி ஆட்சி தொடர...