மதுரை: தூத்துக்குடி மாவட்டம் உழக்குடி கிராமத்தை தொல்லியல் துறை முதன்மை செயலர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. காமராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆணையிட்டுள்ளது. உழக்குடி கிராமத்தில் கல் சக்கரங்கள், இரும்பு உருக்கு உலை போன்ற பல பொருட்கள் கிடைத்துள்ளதாக பொதுநல மனுவை ளத்தெரிவிக்கப்பட்டுள்ளது.